தஞ்சாவூர், மார்ச் 29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் மாணவர் களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளை யின்கீழ் செயல்படும், கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களுக்கு தேவையான விளை யாட்டு உபகரணங்களை மதன்பட்டவூர் சிவனாம் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சத்தியசுந்தரம் ஒருங்கிணைப்பில் செயல்படும் தாய்மண் ஆட்டச் சாலை அமைப்பு சார்பில் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சமூக ஆர்வலர் சிவ சதீஷ்குமார் தலைமை வகித்தார். ரூ.2 லட்சம் மதிப்பிலான தடகள பயிற்சிக்கு தேவை யான அனைத்து விளையாட்டு உபகரணங்கள், சுமார் 80 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.