மயிலாடுதுறை, ஜூலை 21 -
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 179 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரு கிறது.
இப்பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனம் அரசு அதிகாரி களை கொண்டு, விவசாயிகளை மிரட்டி அடிபணிய வைத்து சாலைக் கான நிலங்களை கையகப்படுத்தியது. மேலும் நிலம் அளித்த விவசாயிகளுக்கு போதிய இழப்பீடுகளை முறையாக வழங்காமலும், பல இடங்களில் சொற்ப தொகையையே இழப்பீடாக வும் வழங்கியது. இதனால் அதிருப் தியடைந்த விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி னர்.
விவசாயிகளுக்குரிய இழப்பீட்டை முழுமையாக இதுவரை வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரு கிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரைச் சேர்ந்த விவ சாயி ஒருவருக்கு சேர வேண்டிய நிலத் திற்குரிய இழப்பீட்டுத் தொகையை வேறு ஒரு நபருக்கு அதிகாரிகள் முறை கேடாக வழங்கி விட்டதாக பாதிக்கப் பட்ட விவசாயி வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளார்.
பொறையார் ஒழுகை மேட்டுப்பா ளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராஜ் (68). இவருக்கு சொந்தமாக பொறையார் உப்பனாற்றின் அருகில் பழைய ரயில்வே பாதையையொட்டி இருந்த 225 குழி நிலத்தை நான்கு வழிச்சாலை பணிக்காக தேசிய நெடுஞ் சாலை துறை மற்றும் வருவாய்த் துறை யினர் கையகப்படுத்தினர்.
ஆனால் நிலத்திற்குரிய இழப்பீட் டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவ சாயி ஜெயராஜூக்கு வழங்காமல் வேறு நபருக்கு முறைகேடாக வழங்கியுள்ள னர். அதுகுறித்து அறிந்த விவசாயி ஜெயராஜ், முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என அரசு அதிகாரிகளிடம் ஆண்டுக்கணக் கில் கோரிக்கை மனுக்களை அளித்தும், தற்போது வரை விவசாய நிலத்திற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
வாழ்வாதாரத்திற்கென இருந்த நிலத்தையும் அபகரித்துக் கொண்டு, தனக்கு சேரவேண்டிய இழப்பீட்டை யும் முறைகேடாக வேறு நபருக்கு வழங்கிவிட்டு, ஒவ்வொரு அலுவலக மாக அலைந்தும் இழப்பீட்டை வழங்க வில்லை. இனிமேலாவது அலட்சியப் படுத்தாமல் நிலத்திற்குரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயி ஜெயராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.