districts

img

நகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு பணப் பயன்களை வழங்குக!

பெரம்பலூர், பிப்.20 - பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்  பயன்களை உடனே வழங்க  நடவடிக்கை எடுக்க வேண் டும் என சிஐடியு வலியுறுத்தி யுள்ளது.  இதுகுறித்து, பெரம்ப லூர் மாவட்ட சிஐடியு தொழிற் சங்க மாவட்டத் தலைவர் அ. ரெங்கநாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின்,  மாவட்டப் பொருளாளர் பி. ரெங்கராஜ் மற்றும் நக ராட்சி ஒப்பந்த ஊழியர்கள்  ஆட்சியர் கற்பகத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் நக ராட்சியில் பணிபுரி யும் ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு ஆட்சியர் அறிவித்த  தினக் கூலி, ஒப்பந்ததாரர் களால் இதுவரை வழங்கப் படுவதில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை மனு  அளித்தும், எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படு வதில்லை. தனியார் ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் காக பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் கோடிக்கணக்கில் மோசடி யில் ஈடுபட்டுள்ளது. எனவே, விசாரணை மேற்கொண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பயன்களை வழங்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறி யுள்ளனர். சிபிஎம் ஒன்றியச் செய லாளர்கள் எம்.கருணாநிதி, சி.செல்லமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் பி.கிருஷ் ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.