பெரம்பலூர், மார்ச் 3- மதிமுக சார்பில் விவசாயிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ் ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறைகளை ஒன்றிய அரசு கடுமையாக்கியுள்ளது. அதனை தளர்த்த வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்காதை கண்டித்தும், புயல் பாதிப்பு நிவாரண நிதி ஒதுக்காமல் தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் நகர செயலாளர் துறை ஜெயபிரகாஷ் நன்றி உரையாற்றினார்.