மயிலாடுதுறை, ஜூலை 13 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங் காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிரா மத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் 8 ஆவது நாளான சனிக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது. ஏகோஜி மகாராஜபுரம், மேலத்தெரு வில் வசிக்கும் பட்டியலின மக்கள் பல ஆண்டுகளாக குடியிருக்க இடம் கேட்டு அரசுத் துறையிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதேப் பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 45 குடும்பங் களுக்கு பிரித்து தர வேண்டுமென்ற கோ ரிக்கையை முன்வைத்து அந்த இடத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள், வாலிபர், மாதர் சங்க நிர்வாகிகள் உட்பட 300 -க்கும் மேற்பட்டோர் 8 ஆவது நாளான சனிக்கிழமையும் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்நாள் வரை, எந்தவொரு அரசு அதி காரிகளும் போராட்டம் நடைபெறும் இடத் திற்கு வரவில்லை. இவ்வாறு அதிகாரிகள் அலட்சியம் செய்து வரும் நிலையில், மார்க்சி ஸ்ட் கட்சி தலைவர்களின் முன்னிலையில் இடத்தை பிரிந்து வழங்குவதற்கான அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.