புதுக்கோட்டை, டிச.19- நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் இழிவானப் பேச்சைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைத்தியது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாகதீர், மாணவர் சங்க மாவட்டச் செயலளார் ஆர்.வசந்தகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் அ.மணவா ளன் போராட்டத்தை ஆதரித்துப் பேசினார். இரண்டு சங்கங்க ளின் நிர்வாகிகள் பாலாஜி, மகா லெட்சுமி, தீபக், முரளி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப் பாட்டத்தில் ஏராளமான வாலி பர்கள், மாணவர்கள் பங்கேற்ற னர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட தலை மை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க செய லாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமை வகித்தார். மாநகர செய லாளர் ஆ.செந்தில், மாநகராட்சி மேயர் திலகவதி, சட்டமன்ற உறுப் பினர் டாக்டர் வை.முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்தில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் கே.பி.கே.டி.தங்க மணி, அரு.வடிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் உள்ளிட் டோர் பங்கேற்றனர். பெரம்பலூர் பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாவட்டச் செயலாளர் கோகுல கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்லதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ரமேஷ், திராவிடர் கழக மாவட்ட தலை வர் தங்கராசு, மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் துரைராஜ், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாநில பொறுப்பா ளர் வீர செங்கோலன் ஆகியோர் பேசினர். பாபநாசத்தில் ரயில் மறியல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மேற்கு மாவட்டச் செயலாளர் தமிழன் தலைமை வகித்தார். மறி யலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அரியலூர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் தா.பழூர் திமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாள ரும், எம் எல் ஏவுமான க.சொ.க. கண்ணன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.