புதுக்கோட்டை, நவ.6 - விவசாயிகள் போராட்டங்களின் நியாயத்தை தொடர்ந்து வெளியிட்டதால் நியூஸ் கிளிக் மீடியா ஹவுஸ் மீதான அடக்குமுறை மற்றும் கைது நட வடிக்கையைக் கண்டித்து புதுக்கோட்டையில் அதன் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மாத வன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் ஏ.ராமையன், அ.ராசாங்கம், ஜி.எஸ்.தன பதி, டி.ரமேஷ், அ.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் மற்றும் டி.சலோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நாகை தெற்கு ஒன்றியம் பாப்பாகோவில் கடைத்தெருவில் விச ஒன்றிய தலைவர் எஸ்.என். ஜீவ ராமன் மற்றும் விதொச ஒன்றியத் தலைவர் எம்.சுப்பிர மணியன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி கண்டன உரையாற்றினார். திருமருகல் பேருந்து நிலையம், கீழ்வேளூர் கடைத்தெரு, சாட்டியக்குடி கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கீழையூர் கடை தெருவில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் கே. கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சேகர் கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வி.எஸ். கலியபெருமாள், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.