நாமக்கல், ஜூலை 1- ஒன்றிய மோடி அரசு புதிதாக கொண்டு வந்துள்ள, மூன்று கிரிமினல் சட்டங்களை உடனடி யாக திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப்பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம். வழக்காடிகளுக்கு நியாயம் மறுக்குக்கும் சட்டம், காவல்து றைக்கு அதிக அதிகாரம் தரும் சட்டம் ஆகிய ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள, மூன்று கிரிமினல் சட்டங்களை உட னடியாக திரும்பப் பெற வலியு றுத்தி, நாமக்கல்லில் வழக்கறி ஞர்கள் ஒருவாரம் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாமக்கல் நீதிமன்றத் தில் நடைபெற வேண்டிய வழக்கு விசாரணைகள் அனைத்தும் மறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து புதிய சட்டங் களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாமக் கல் நீதிமன்ற வளாகம் அருகே வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அய்யாவு மற்றும் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை, தரும புரி, சேலம் உள்ளிட்ட மாவட் டங்களிலும் ஒரு வார நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.