மயிலாடுதுறை, நவ.8 - மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள இளையாளூர் ஊராட்சி அரங்கக்குடி புதுத்தெரு கிராமத்தில் கடந்த 4 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அரங்கக்குடி புதுத்தெரு வில் 150-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஊராட்சி மூலம் விநியோகிக் கப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாக குற்றம் சாட்டி னர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு, புதிய குழாய் பதிக்கும் பணி நடை பெற்று வருகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பெரும் அவதிப்படுவதாக வும், ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படு வதாகவும் கூறி, வடகரை ஊசி மதகில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஆணை யர் மற்றும் அதிகாரிகள், பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டதை யடுத்து போராட்டம் கை விடப்பட்டது.