புதுக்கோட்டை, ஜூலை 23-
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை தொகுதிக்குட்பட்ட கல்லாக் கோட்டை ஊராட்சியில் பல்வேறு பணி களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை சனிக்கிழமை அடிக்கல் நாட்டி னார்.
கல்லாக்கோட்டை ஊராட்சி அரசு மேல் நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான புதிய கலையரங்கம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல் நாட்டினார். மேலும், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ.48 லட்சம் மதிப்பீட்டில், கல்லாக்கோட்டை பாய்காரர் தெருவிற்கு புதிய சாலை அமைக்கும் பணியையும் எம். சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பரமசிவம், ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.