districts

திட்டப் பணிகள் கள ஆய்வு

தஞ்சாவூர், ஜூலை 8-

      தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வட்டாரத்தில், 2022-23 ஆம் நிதியாண்டில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதி உதவி யுடன், தென்னை மறுநடவு மற்றும் புத்தாக்கம் திட்டத்தின் கூறுகளான தென்னையில் காய்ப்பு திறனற்ற, பூச்சி நோய் தாக்கிய மரங்களை அகற்றுதல் மற்றும் மறுநடவு, புதிய  கன்றுகளை நடவு செய்தல், தென்னையில் உர மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை செயல் விளக்க திடல் ஆகியவை செயல் படுத்தப்பட்டன.  

      அந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் எவ்வாறு சென்றடைந் துள்ளது, அதன் மூலம் விவசாயி கள் எவ்வாறு பயனடைந்துள்ளார் கள் என்பதை பற்றியும் தென்னை வளர்ச்சி வாரிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

      பட்டுக்கோட்டை வட்டாரம் துவர மடை கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தின் கீழ்  செயல் விளக்கம் மற்றும் புதிய  கன்றுகள் வழங்கப்பட்ட தென்னந் தோப்புகளை தென்னை வளர்ச்சி  வாரிய தலைமை அலுவலர் டாக்டர்  பி.ஹனுமந்தே கெளடா, சென்னை  இயக்குநரக வேளாண்மை துணை  இயக்குநர் (தென்னை) சீ.சித்ரா  உள்ளிட்ட பலர் அடங்கிய குழு கள ஆய்வு மேற்கொண்டது. இந்த  ஆய்வு துவரமடை கிராமத்தில்  சங்கர் கணேஷ் தென்னந்தோப்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தென்னை சாகுபடியில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.