கரூர், ஆக.20 -
கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி பிரதான சாலை யில் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரி சல், விபத்துகள் ஏற்படுவ தால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கனரக வாகனங்கள் புறவழிச் சாலையில் செல்ல, அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி பேரூராட்சி 1 ஆவது வார்டு கவுன் சிலர் கே.வி.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய தாவது:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. மேலும் அர வக்குறிச்சி ஒன்றியத்தில் 20 சிற்றூ ராட்சிகளும், அரவக்குறிச்சி நகரத் தில் ஆயிரக்கணக்கான குடியிருப் புகளும் உள்ளன.
அரவக்குறிச்சி நகரத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், நீதி மன்றம், சார்பதிவாளர் அலுவலகம், அரவக் குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம், அரசு மருத்து வமனை, பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், முக்கிய கடை வீதிகள்உள்ளிட்ட அனைத்தும் பிரதான சாலையில்தான் இருக்கின்றன.
பழனி, திண்டுக்கல், பொள் ளாச்சி, தாராபுரம், உடுமலைப் பேட்டை மற்றும் கேரள மாநிலம் கொச்சின் ஆகிய பகுதிகளுக்கு, அரவக்குறிச்சி நகரத்தை கடந்து தான் செல்ல வேண்டும். கிராமப்புற பகுதியில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
அரவக்குறிச்சி நகரத்தில் உள்ள சாலைகளில், ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகள் எதிரெதிரே வந்தால் கடந்து செல்ல முடியாத வகையில் மிகவும் குறுகலாக உள் ளது. இந்த குறுகிய சாலையில் மணல், சிமெண்ட் லோடு, காய் வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை ஏற்றிச்செல்லும் கன ரக வாகனங்கள் செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக் குள்ளாகின்றனர்.
முக்கியமாக, இந்த கனரக வாக னங்களால் அதிகளவில் விபத்து கள் நிகழ்கின்றன. இதனை முற்றி லும் தடுப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம், அரவக்குறிச்சி காவல் துறை மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
புறவழிச்சாலையை பயன்படுத்த வேண்டும்
அரவக்குறிச்சி நகரத்தின் சுமார் 2 கி.மீட்டர் தொலைவிற்கு முன்பே புறவழிச்சாலை உள்ளது. கரூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கரடிப்பட்டி என்ற இடத்திலிருந்து புறவழிச்சாலை வழியாக வந்து, அரவக்குறிச்சி காவல் நிலையம் வழியாக தாராபுரம், பழனி, கேர ளம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம்.
அதேபோல பள்ளப்பட்டி வழி யாக வரும் கனரக வாகனங்கள், அரவக்குறிச்சி நகரத்தின் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்பு உள்ள ஈஸ்வரன்கோவில் எதிரில் உள்ள புறவழிச்சாலை வழியாக கரூர், திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு கனரக வாக னங்கள் செல்ல முடியும். ஆனால் இதனை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய பேரூராட்சி நிர்வாகம், காவல் துறை அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.
பகல் நேரத்தில் அரவக்குறிச்சி நகரத்திற்குள் வரும் கனரக வாக னங்களுக்கு காவல்துறை மூலம் அபராதம் விதிக்க வேண்டும். புற வழிச்சாலை துவக்கத்தில் எச்ச ரிக்கை பலகையும், வழிகாட்டி பல கையும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வைக்க வேண்டும்.
கனரக வாகனங்கள் நகரத்திற்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி பல முறை பேரூராட்சி, மாவட்ட ஆட்சி யர் ஆகியோரிடம் மனு வழங்கி யும் இன்றுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப் படும்.
அரவக்குறிச்சி பேருந்து நிலை யத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனைத்து பேருந்துகளும் அரவக்குறிச்சி பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும். எனவே பேரூ ராட்சி நிர்வாகம் அரவக்குறிச்சி மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் தேவை களை பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.