districts

img

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை செப்.4-   மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் (பவர் டில்லர்)  வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் திங்க ளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 இன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட விவ சாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் 5 ஆயிரம் பவர் டில்லர் வழங்கும் திட் டத்தை தொடங்கி வைத்தார்.  அதன்படி மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட  விவசாயிகளுக்கு மானிய விலை யில் பவர் டில்லர் வழங்கும் விழா செம்பனார்கோவில் வேளா ண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குநர் சேகர் தலை மை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா  மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர்,  மகேந்திரன், வேளாண்மை விற் பனை துறை துணை இயக்கு னர் வெற்றிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை பொறியியல் துறை உதவிச் செயற்பொறியா ளர் ஸ்ரீதர் வரவேற்றார். பூம்புகார் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்  நிவேதா எம் . முருகன் கலந்து கொண்டு 37 விவ சாயிகளுக்கு மானிய விலை யில் பவர் டில்லரை வழங்கி னார்.  விழாவில் விவசாயிகளுக்கு, ரூ.2.12 லட்சம் மதிப்பிலான பவர் டில்லர் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ.85 ஆயிரம் மானியத்தில், 37  பவர் டில்லர்கள் மொத்தம் ரூ. 30.85 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது. விழாவில் உதவிப் பொறி யாளர் கீர்த்திவாசன் மற்றும் வேளாண்மை துறையினர் கலந்து கொண்டனர்.