தஞ்சாவூர், பிப்.4 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை சார்பாக, தமிழக முதலமைச்சர் பெயரிலான அறக்கட்டளை, ஆபிரகாம் பண்டிதர் நினைவு அறக்கட்டளை, தென் னாப்பிரிக்க ரெங்கசாமி பிள்ளை அறக் கட்டளை, பாரதி சங்கீத வித்யாலயா அறக்கட் டளை சிறப்பு நிகழ்வு கலைப்புல கருத்த ரங்கக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. முன்னதாக அறக்கட்டளைகள் சார்பில், மாநில அளவிலான இசைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிக்கு சென்னை ராணிமேரி கல்லூரி, மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத வித்யா லயம், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரியிலிருந் தும், தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்து இசைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழக பதி வாளர் சி.தியாகராஜன், தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலர் பெ.இளையாப்பிள்ளை வாழ்த்திப் பேசினர். சென்னை அரசுக் கல்லூரி மேனாள் முதல்வர் அமுதா பாண்டியன், “ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசை ஆய்வு முடிவுகள்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றி னார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் இசைத்துறை பேராசிரியர் இசை வல்லுநர் முனைவர் பி.கோவிந்தராஜன், “சங்கீத கலாநிதி க.பொன்னையாப் பிள்ளை யின் பாடல்களை” கற்றுத் தந்து பயில ரங்கம் நடத்தினார். இசைத்துறை தலைவர் முனைவர் இரா. மாதவி வரவேற்றார். இசைத்துறை இணைப் பேராசிரியர் செ.கற்பகம் நன்றி கூறினார்.