புதுக்கோட்டை, ஜூன் 21-
வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு சிறிய அள விலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23.6.2023 அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதி யுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளை ஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்புக் கான https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறு மாறு ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.