திருச்சிராப்பள்ளி/தஞ்சாவூர், ஆக.13 -
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில், கலை ஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஆக.12 அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழி காட்டு மையம் இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தின.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மகாராணி, பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் அழகப்பா மோசஸ் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூரில் 307 பேர் பணி நியமனம்
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர்மற்றும் அறிவியல் கல்லூரி யில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கம் இணைந்து நடத்திய மாபெ ரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். முகாமில், சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சிபுரம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து 140-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவ னங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 2,073-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 307 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப் பட்டன. 296 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 22 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பி னர்கள் துரை சந்திரசேகரன், (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.