திருவாரூர், பிப்.25- திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தோழர் மு.சு. பாரி (56) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாள ரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் மற்றும் நன்னி லம் தினகரன் செய்தியாளருமான மு.சு.பாரி வெள்ளிக் கிழமை இரவு காலமானார். அன்னாரின் மறைவு செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பி னர் டி.வீரபாண்டியன், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், நகரச் செயலாளர் சீனி.ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் மாநில துணைத் தலைவர் வி.மோகன், திருவாரூர் மாவட்ட தலைவர் ஆறு முகம், தீக்கதிர் மாவட்ட செய்தியாளர் நீதிராஜன் உள் ளிட்டோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் அஞ்சலிக்காக நன்னிலம் வள்ளலார் குருகுலப்பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு, பின்னர் சனிக்கிழமை மாலை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலை வர் எஸ்.டி.புருஷோத்தமன் தோழர் பாரியின் துணைவி யாரும் வள்ளலார் குருகுலம் பள்ளியின் முதல்வருமான பரிமளம் காந்தி மற்றும் குடும்பத்தினரிடம் போனில் தொடர்பு கொண்டுஆறுதல் கூறினர்.