திருவாரூர், பிப்.20 - பிரதமர் நரேந்திர மோடி ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங் களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி ஜம்மு வில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்திட்டத்தில் திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், அதிநவீன உள்கட்டமைப்புகளைக் கொண்ட கைலாஷ் சத்யார்த்தி கல்விக் கட்டடம், கோதாவரி பெண்கள் விடுதி (300 படுக்கைகள்), மகாநதி ஆண்கள் விடுதி (300 படுக்கைகள்) ஆகிய வற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி மத்திய பல்கலைக் கழகத்தில் உள்ள மீடியா அரங்கில் ஒளி பரப்பானது. இதற்காக திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ் ணன், பதிவாளர் பேராசிரியர் இரா.திருமுரு கன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேரா சிரியர் சுலோச்சனா சேகர், நூலகர் முனைவர் ஆர்.பரமேஸ்வரன் பங்கேற்றனர். ரூ.95.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மூன்று கட்டடங்களும் உயர்கல்வி நிதி யளிப்பு முகமையின் (HEFA) நிதியுதவி யுடன், மத்தியப் பொதுப் பணித்துறை யால் கட்டப்பட்டுள்ளது. புதிதாகத் திறக்கப் பட்டுள்ள கட்டடங்களில் மின்தூக்கி (Lift), வலைதள இணைப்பு (Wi-Fi) மேம்பட்ட பாது காப்பு நடவடிக்கைகள் போன்ற நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. ரூ.31.94 கோடி செலவில் 7092 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட கைலாஷ் சத்யார்த்தி கல்விக் கட்டிடம், இசைத்துறை, புள்ளியியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதத் துறை, தோட்டக் கலைத்துறை, தொற்றுநோ யியல் மற்றும் பொது சுகாதாரத் துறை, நுண்ணுயிரியல் துறை, உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய ஆறு துறை களை உள்ளடக்கியது. கோதாவரி பெண்கள் விடுதி 300 படுக்கை களுடன் 8117 சதுர மீட்டரில், ரூ.31.63 கோடி செலவிலும், மகாநதி ஆண்கள் விடுதி 300 படுக்கைகளுடன் 8117 சதுர மீட்டர், ரூ.31.63 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.