கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு விருதுநகர், ஏப்.14- பிரதமர் மோடி, இந்தியாவிற்கு சொந்தமான சுமார் 6 சதுர கி.மீ பரப்பளவிலான 111 கிராமங்களை வங்கதேசத்திற்கு தாரை வார்த்து விட்டார் என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். விருதுநகர் தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பா ளர் ப.மாணிக்கம்தாகூரை ஆதரித்து கே.எஸ்.அழகிரி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி கள் அனைத்தும் நம் நாட்டின் பொரு ளாதாரத்தை வளர்க்க, விவசா யத்தை, கைத்தொழிலை வளர்க்க வேண்டுமென விரும்புகின்றன. பெரும் தொழில்களுக்கு உதவி செய்ய வேண்டுமென நினைக்கின் றன. மன்மோகன் சிங் ஆட்சி காலத் தில், உலகச் சந்தையில் 108 டாலராக இருந்த போது டீசல் ரூ.40, பெட் ரோல் ரூ.60 என விலை இருந்தது. இன்று உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந் துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஆக உள்ளது. கேஸ் விலை ரூ.1200. எனவே, மிகவும் தோல்விகரமான ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. இந்திய தேசம் ஒரு ஒற்றுமை யான நாடாகும். கடவுள் நம்பிக்கை என்பது வேறு. தேர்தல் என்பது வேறு. மகாத்மா காந்தியை விட இராமரை கையில் எடுத்தவர்கள் வேறு யாரும் கிடையாது. அயோத்தி யில் ஏற்கனவே 3200 இராமர் கோவில் கள் உள்ளன. மோடி கட்டியது 3201 ஆவது கோவிலாகும். இராமர் கோவிலை அவசர அவசரமா கட்டி யுள்ளீர்கள். அதில் இன்னும் கோபு ரம் கட்டவில்லை. முடிக்க வேண்டிய பணிகள் இன்னும் இருக்கிறது. சங்கராச்சாரியார்களை திறப்பு விழா விற்கு அழைத்தார்கள். ஆனால், எந்த சங்கராச்சாரியாரும் வரவில்லை. முற்றுப் பெறாத ஒரு கோவிலில் கும் பாபிஷேகம் வைக்கக் கூடாது என பல ருக்கும் தெரியும். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அக்கோவிலை திறந்துள்ளார் மோடி. விவசாயிகளின் விளை பொருட்க ளுக்கு நியாயமான விலை கிடைக்க சட்டம் இயற்றுவோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள் ளோம். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி எம்.எஸ்.சுவாமிநாத னின் அறிக்கையை நடைமுறைப் படுத்துவோம். எனவே, விவசாயி களின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நீட் தேர்வு தமிழகத்தில் சிர மத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கி றது. ஏராளமான மாணவர்கள் ஸ்டேட் போர்டில் படிக்கின்றனர். சிபிஎஸ்இ மூலம் கேள்வி கேட்கப்படுகிறது.
எனவே, விரும்புகிற மாநிலங்கள் நீட் தேர்வை நடத்தலாம். அதில் மாற்றம் செய்யும் மாநிலங்கள் மாற்றத்தை செய்து கொள்ளலாம். அதற்கு காங்கி ரஸ் தடையாக இருக்காது எனவும் தேர்தல் அறிக்கையில் கூறியுள் ளோம். கச்சத்தீவைப் பற்றி பிரதமர் மோடி, இதைப் போன்ற பொய்யை சொல்லக்கூடாது. கச்சத்தீவு யாருக் கும் தாரை வார்க்கப்படவில்லை. அதை நாமும் பயன்படுத்திக் கொள் ளலாம். இலங்கையும் பயன்படுத் திக் கொள்ளலாம். சட்டரீதியாக யாருக்கும் எழுதி கொடுக்கவில்லை. தமிழக மீனவர்களும், இலங்கை மீன வர்களும் அங்கு வலையை காய வைக்கலாம். ஓய்வு எடுத்துக் கொள் ளலாம். கச்சத்தீவு இரு நாடுகளின் பெயரிலும் பட்டா உள்ளது. அங்கு யாரும் குடியேற முடி யாது. ராணுவ முகாம் அமைக்க முடி யாது. தாரை வார்த்ததாக மோடி நினைத்தால், 9 ஆண்டுகளாக ஆட்சி யில் இருக்கிறார். அதை படையெடுத் துச் சென்று பிடித்துக் கொண்டு வர வேண்டியது தானே. நாங்கள் ஆத ரிக்கிறோம். எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஏனென்றால் இல்லாத ஒன்றை கூறக் கூடாது. ஆதாரப்பூர்வமாக வங்காள தேசத்திற்கு 111 கிராமங்களை மோடி தானமாக கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு கிராமமும் கச்சத்தீவை விட பெரியது. கச்சத்தீவு 1.5 கிலோ மீட்டர் பரப்பளவு தான். மோடி கெடுத்த 111 கிராமங்க ளும் 6 சதுர கி.மீ பரப்பளவு உள் ளவை. எதற்காக கொடுத்தார். நல் லெண்ண அடிப்படையில் வழங்கி யதாக கூறுகிறார். இது கோப்பு களில் உள்ளது. இந்த உண்மை நாடா ளுமன்றத்தில் கேட்கப்பட்டு பதில் கூறியுள்ளார். வங்கதேசத்திற்கு மொத்தமாக எழுதி கொடுத்து விட் டார்’’ என தெரிவித்தார்.