புதுக்கோட்டை அக்.21:- கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைஞர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணாரூபவ் மாவட்ட கலைமன்ற விருதுகள் மற்றும் காசோலைகளை திங்கள் கிழமை வழங்கினார். மாவட்டங்கள் தோறும் கலைஞர்களுக்கு அகவை மற்றும் கலைப் புலமையின் அடிப்படையில் மாவட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட் டத்தில் 15 கலைஞர்களுக்கு மாவட்ட விருதுகள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. தவில், ஓவியம், சிலம்பம், நாதஸ்வரம், கிராமிய நடனம், குரலிசை, நாடகம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை பிரிவுக ளில் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு, கலை இளமணி விருது மற்றும் 18 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது மற்றும் 35 முதல் 50 வயது வரை கலைச் சுடர்மனி விருது மற்றும் 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது மற்றும் 66 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கலை முதுமணி விருது மற்றும் காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். உதவி இயக்குநர் (கலை பண்பாட்டுத் துறை) செந்தில்குமார், கலைஞர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.