தஞ்சாவூர், அக்.6 - இந்திய அஞ்சல் துறை சார்பில், தஞ்சாவூரில் செவ்வாயன்று (அக்.8, 9 தேதிகளில்) தபால் கண்காட்சி நடை பெறவுள்ளது என முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கே.தங்கமணி தெரி வித்தார். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: இந்திய அஞ்சல் துறையின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சா வூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய அஞ்சல் கோட்டம் சார்பில் தபால் தலை கண்காட்சி அக்.8, 9 தேதி களில் ‘களஞ்சியம்’ என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக் கழக கரிகாலச் சோழன் கலையரங்கத்தில் நடைபெற வுள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கண்காட்சி களில் காட்சிப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற தபால் தலைகள் மற்றும் தேர்ந் தெடுக்கப்பட்ட சிறந்த தபால் தலை கள் அனைவருடைய பார்வைக்கும் வைக்கப்படும். மேலும், அக்கண்காட்சி யில் மாணவர்களும், பள்ளிகளில் தபால் தலை சேகரிப்பாளர்களும் அவர் களுடைய தபால் தலை சேகரிப்பு களை காட்சிப்படுத்த உள்ளனர். இந்த தபால் தலை கண்காட்சி யின் முக்கிய குறிக்கோள், பள்ளி மாண வர்கள் மற்றும் பொது மக்களிடையே தபால்தலை சேகரிப்பு பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நமது பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை. மேலும் அழிந்து வரும் அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசு, களஞ்சியம் கண்காட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நடத்தப்படும் இரண்டு நாட்களிலும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள், கருத்த ரங்கம், பயிற்சி பட்டறை அந்தந்த துறை களில் சிறப்பானவர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு ஸ்டால்கள், அஞ்சலக வங்கி கணக்கு தொடக்கம், ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைக் கான கவுண்டர்களும் அஞ்சல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களும், பள்ளி மாண வர்களும் கலந்து கொண்டு பயன டைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கண்காட்சியின் கருப்பொ ருள் சின்னமான கடற்பசு குறித்து புகைப்படத்தை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கே.தங்கமணி வெளியிட, அதனை அஞ்சல் கண்கா ணிப்பாளர்கள் சி.கஜேந்திரன், எஸ்.ரகுராமகிருஷ்ணன், துணை அஞ்சல் கண்காணிப்பாளர் எம்.உமாபதி ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.