districts

img

குறுவட்ட விளையாட்டுகளில் பொறையார் சர்மிளா பள்ளி முதலிடம்

மயிலாடுதுறை, செப்.10 - தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை  நடத்தும் குடியரசு தின விளை யாட்டுப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி அரசு விளை யாட்டரங்கில் நடைபெற்றன.  தரங்கம்பாடி குறுவட்ட அளவி லான இப்போட்டிகளில், 34 பள்ளி களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் விளை யாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பொறையார் சர்மிளா காடஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகப் புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தனர்.  ஆண்கள் 14 வயதுக்கு கீழோர் பிரிவிலான போட்டியில் இப்பள்ளி மாணவர் சரண்குமார் சாம்பியன் பட்டம் வென்றார். பல்வேறு தடகளப்  போட்டிகளில் இப்பள்ளி மாணவ-மாணவியர்கள் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை வென்று, குறு வட்ட அளவிலான தனியார் பள்ளி களில் முதலிடமும், அனைத்துப்  பள்ளிகள் அளவில் இரண்டாமிட மும் பெற்றனர். வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகள் மாவட்டப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள னர். தனியார் பள்ளிகளுக்கான மயி லாடுதுறை மாவட்ட கல்வி அலுவ லர் நிர்மலா ராணி வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.