திருவாரூர், ஜூலை 12 - திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் குடும்ப நலத்துறையின்கீழ் நடை பெற்ற உலக மக்கள் தொகை தின விழிப் புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய ரயில் நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாணவ-மாணவி கள் மற்றும் அரசு அலுவலர்கள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேரணியில், இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 250 பேர் பங்கேற்றனர். பேரணியானது, திருவா ரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சோமசுந்தரம் பூங்காவில் நிறைவடைந்ததது.