மயிலாடுதுறை, அக்.18 - மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகா ரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வுக்கு மீனவ கிராம மக்கள் ஒன்றுகூடி மீன், இறால், நண்டு, கணவாய் என விருந்து வைத்து தங்களின் மனப்பூர்வ மான நன்றியை தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீன வர்களின் விடுதலைக்காக அதிக முயற்சி களை மேற்கொண்டதற்காக, மீனவர்கள் ஊர்கூடி விருந்து வைத்த இந்நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத் துரை என்பவருக்குச் சொந்தமான விசைப் படகு, 4 பைபர் படகுகளில் கடந்த செப்.20 ஆம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் மறு நாள் கரை திரும்ப வேண்டிய நிலையில், அவர்கள் கரை திரும்பாததால் மீனவர் கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மீன்வளத் துறை பணி மேற்பார்வையாளர்கள் தீன தயாளன் மற்றும் வாசன் ஆகியோர், பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற் கொண்டனர். இதில், ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு பைபர் படகுகளில் இருந்த, மயிலாடுதுறை மாவட்டம் பூம்பு கார் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 21 மீன வர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சந்திரபாடி கிராமத் தைச் சேர்ந்த 13 பேர் உட்பட 37 மீனவர்க ளையும் இலங்கை கடற்படை கைது செய்ததை உறுதி செய்தனர். இந்த சம்ப வம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங் களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீனவர்களின் உறவி னர்கள், அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளையும் பாதுகாப்பாக மீட்டுத் தரு மாறு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப் பினர் ஆர்.சுதாவிடம் கோரிக்கை வைத்த னர். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட் டத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக் கோரி இலங்கையில் தற்போது அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமாரா திசநாயக-வுக்கு மயிலாடுதுறை எம்.பி., சுதா கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்தி ருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, “மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகு திக்குட்பட்ட பூம்புகார், சந்திரபாடி, வான கிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இவர்கள் படகு கவிழ்ந்ததில், துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரரின் உடலை மீட்டெடுக்க இலங்கை கடற்படைக்கு உதவியவர்கள். இச்சூழலில் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளில் உள்ள ஷரத்து களை மீறி, இலங்கை கடற்படை ஆபத்தில் உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டு, சட்டவிரோதமாக கைது செய்து உள்ளது. எனவே அந்த மீனவர்களையும் அவர் களின் படகுகளையும் உடனடியாக விடு விக்க வேண்டும். இதேபோல், இலங்கை சிறையில் வாடும் மற்ற இந்திய மீன வர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களின் அனைத்துப் படகுகளையும் கூடிய விரை வில் பயன்பாட்டு நிலையில் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர் களை விடுவிக்கக் நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கும் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், கடந்த அக். 4 ஆம் தேதி மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பல்வேறு நடை முறைகளுக்குப் பின்னர் திங்கள்கிழமை நள்ளிரவு விமான மூலம் அவர்கள் அனை வரும் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்களை விமான நிலையத்தில் ஆர்.சுதா எம்.பி., சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இச்சூழலில் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மயிலாடு துறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா விற்கு, இலங்கையில் இருந்து ஊர் திரும்பிய மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் பூம்புகார் மீனவ கிராம பஞ்சா யத்தார்கள் விருந்து வைத்து நெகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்தனர். இதற்காக கடல் உணவு வகைகளை சமைத்து அவர்கள் பரிமாற மீனவர்களுடன் தரையில் அமர்ந்து அவர் உணவருந்தினார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீன வர்களின் விடுதலைக்காக அதிக முயற்சி களை மேற்கொண்டதற்காக, மீனவர்கள் ஊர்கூடி விருந்து வைத்த நிகழ்வு கவ னத்தை ஈர்த்துள்ளது.