புதுக்கோட்டை/பேராவூரணி, ஜன.8:- புதுக்கோட்டை நிஜாம் குடி யிருப்பு, என்.ஜி.ஓ. குடியிருப்பு, எஸ்.எஸ். நகர், அன்னை நகர், பாமா நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சமய நல்லிணக்கப் பொங்கல் விழாவை நிஜாம் ஓரியண்டல் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தினர். இப்பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறார் மற்றும் பெரியவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து சமூகத்தின ரும் இணைந்து பொங்கல் வைத்து சர்க்கரைப் பொங்கலைப் மகிழ்ச்சி யுடன் பரிமாறிக் கொண்டனர். புதுக்கோட்டை நகர்மன்றத் துணைத் தலைவர் மு.லியாகத் அலி, மூத்த வழக்குரைஞர் சந்திர சேகரன், நகர்மன்ற உறுப்பினர் கள் லதா கருணாநிதி, ஜெ.ராஜா முகமது, சிவக்குமார் உள்ளிட்டோ ரும் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆனந்தா பாக் பொதுநலச் சங்கத் தலைவர் சா.விஸ்வநாதன், செயலர் சத்யா, பொருளாளர் ரத்தி னம் மற்றும் நிர்வாகிகள் வேள வேந்தன், சையது இப்ரஹிம் பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர். பேராவூரணி பேராவூரணி அமிழ் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் பாரம்பரிய போட்டிகளுடன் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, முனைவா் வேத. கரம்சந்த் காந்தி தலைமை வகித் தாா். ஆசிரியா் அ. காஜாமுகைதீன், நிர்வாக இயக்குநா் பிரவீனா உதயகுமாா், கராத்தே மற்றும் சிலம்பப் பயிற்சியாளா் ஸ்பா்ஜன் ராஜ், யோகா பயிற்சியாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா், பேரூராட்சி உறுப்பினா் ஹபீபா ஆகியோா் பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்தனா். இதில், மாணவா்கள், பெற் றோா்கள் ஆகியோருக்கு பாரம் பரிய கோலப்போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன. விழாவில், ஆதனூா் புனித அன்னாள் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் அருட்சகோ தரி ராபா்ட் கிளாரா, பவுண்டேஷன் செயலாளா் விவேக் ரோசாரியா, துணைத் தலைவா் முகமது நசீா், துணைச் செயலாளா் அருண் குமாா், திமுக நகரச் செயலாளா் என்.எஸ். சேகா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் திரளாகக் கலந்து கொண்டனா்.