districts

img

டெல்டாவில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தஞ்சாவூர், ஜன.14 - பொங்கல் திருநாளை முன் னிட்டு டெல்டா மாவட்டங்களில் ஞாயிறன்றும் பல்வேறு இடங் களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சங்கம் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர்  ஒன்றியம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து, பெரமையன் கோவில் அருகே சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.  இளங்கோவன், மாவட்டத் தலை வர் பி.கஸ்தூரி, மாவட்ட துணைத்  தலைவர் ஏ.மேனகா, ஒன்றியச் செயலாளர் சி.ஏ.சந்திரபிரகாஷ், ஒன்றியத் தலைவர் எம்.பால சுப்பிரமணியன், ஒன்றியப் பொரு ளாளர் புஷ்பலதா, பன்னீர் செல்வம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஜே. ராஜேஷ் கண்ணா மற்றும் அரிமா சங்க தலைவர் ராஜா என்கிற ராஜேந்திரன், மல்கோத்ரா, பட்டி மன்ற நடுவர் ராஜநிதி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோன்று பட்டுக்கோட்டை  ஒன்றியம், கோட்டாக்குடியில் ஊராட்சி மன்றம், தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் சங்கம் இணைந்து சமத்துவ  பொங்கல் வைத்து கொண்டாடி னர். ஊராட்சி மன்ற தலைவர், சங்கத்தின் மாவட்டத் துணைத்  தலைவர் ஏ.மேனகா, மாவட்ட  துணைச் செயலாளர் சி.ஏ.சந்திரபிர காஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   சங்கத்தின் திருவோணம் ஒன்றி யம் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் ஒன்றியச் செய லாளர் கோவி.ராதிகா மற்றும் கிளை  உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் சமத் துவ பொங்கல் விழா நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் புனித வதி, துணைத் தலைவர் அழகே சன், செயல் அலுவலர் ராஜசேகர், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பாப நாசம் பேரூராட்சி சார்பில் 108 சிவா லயத்தில் தூய்மைப் பணி நடந்தது. இதில் தலைவர் பூங்கு ழலி, துணைத் தலைவர் பூபதி  ராஜா, கவுன்சிலர்கள் பங்கேற்ற னர். தூய்மைப் பணியாளர்களுக்கு  சீருடை, பரிசுகள் மற்றும் சிறப் பாகப் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பட்டது.

திருச்சிராப்பள்ளி - மாதர் சங்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அண்ணா நகர் நலச்சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா, திருச்சி மாவட்டம் அண்ணா நகர் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இவ்விழா திங்கள் கிழமையும் (ஜன.15) நடைபெறு கிறது. ஞாயிறன்று பெரியவர்களுக்கு ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்த யம், இசை நாற்காலி, பானை  உடைத்தல் உள்ளிட்ட போட்டி களும், சிறியவர்களுக்கு லெமன்  ஸ்பூன், சாக்குபோட்டி, கற்கள் சேகரித்தல், சோடா பாட்டில் நிரப்பு தல், தவளை போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. விழாவின் 2 ஆம் நாளான திங்களன்று கோலப்போட்டி, நடன  போட்டி, பேச்சுப்போட்டி, சமத்துவ பொங்கல், தமிழர் பண்பாடு, மாறு வேட போட்டிகள் நடைபெற உள்ளன. விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அஹமது, கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர்,  மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் சரஸ்வதி, மாவட்ட தலைவர்  பொன்மகள், சிபிஎம் காமராஜர் கிளை செயலாளர் விஜய், மாதர் சங்க ஜங்ஷன் பகுதி செயலாளர் வள்ளி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். விழாவில் அமைச்சர்கள் கே. என்.நேரு, அன்பில் மகேஷ் பொய் யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுகின்றனர்.

கந்தர்வகோட்டை ஊராட்சி

கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சனிக் கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பங் கேற்றார். கந்தர்வகோட்டை ஊராட்சி  ஒன்றியக் குழுத் தலைவர் ரத்தின வேல், ஊராட்சி மன்றத் தலை வர்கள் தமிழ்ச்செல்வி, ராணி முரு கேசன், சிவரஞ்சனி சசிகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சி லர்கள் மற்றும் ஊராட்சி மன்ற  வார்டு உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.

அறந்தாங்கி

அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடை பெற்றது. செயலாட்சியர் பூங்கா வனம், பொது மேலாளர் பால சுப்பிரமணியன், காசாளர் சத்யா மற்றும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.