districts

img

மகாத்மா காந்தி சிலைக்கு அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள் மரியாதை

தஞ்சாவூர், அக்.2 -  தேசப்பிதா மகாத்மா காந்தியின் 156 ஆவது பிறந்த நாளையொட்டி, புதனன்று டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங் களில் அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப் புகள் சார்பில் காந்தியின் உருவச் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், தஞ்சாவூர் மாநக ராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. மேலும், மத நல்லிணக்கம் -  சமூக ஒற்றுமை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனி வாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், என்.சரவணன், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை இரா.புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.குருசாமி, ஹெச். அப்துல் நசீர், பி.சத்தியநாதன், ஷபீர், இந்திய மாணவர் சங்கம் கு.சந்துரு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். தமுஎகச பட்டுக்கோட்டை கிளை சார்பில், செயலாளர் மோரிஸ் அண்ணா துரை தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. 

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தமிழ்நாடு மக்கள்  ஒற்றுமை மேடையின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.அசோகன் தலைமை வகித்தார். தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை  அணிவித்து மக்கள் ஒற்றுமை உறுதிமொழி  ஏற்கப்பட்டது. மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் அ.மணவாளன் நன்றி கூறினார். புதுக்கோட்டை திலகவதியார் ஆதினம் தயானந்த சந்திரசேகர், காங்கிரஸ் சார்பில் இப்ராஹிம்பாபு, மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் எம்.ஏ.ரகுமான், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி. சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம், மாதர்  சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச் செல்வி, செயலாளர் பி.சுசிலா உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஆலங்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்யப்பட்டது. கிளைத் தலைவர் ஆர்டிஸ்ட் முருகேசன், செயலாளர் நேசன் மகதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தில்லையாடி

மயிலாடுதுறை மாவட்டம், தில்லை யாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை மணி மண்டப உள்அரங்கில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு பொறை யார் லயன் சங்கத்தினர் மாலை அணிவித்து  மரியாதை செய்தனர். தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ், லயன்  சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செய லாளர் ஜெயசீலன், பொருளாளர் சதீஷ் மாலை அணிவித்தனர். தொடர்ந்து தியாகி  வள்ளியம்மை சிலைக்கும் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இந்நி கழ்ச்சியில் தியாகி வள்ளியம்மை நினைவு மணிமண்டப காப்பாளர் ஹைதர் அலி, பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆக்கூர் ஊராட்சி மன்ற வளாகத்தி லுள்ள மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில்  அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜான்சன் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், ஊராட்சி மன்ற  தலைவர் ஏ.ஆர்.சந்திரமோகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். 

புகளூர்

புகளூர் வட்டார பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள், புகளூர் காந்தியார்  பள்ளியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். காங்கிரஸ் நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் சண்முகம், ஒன்றிய  செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம்  அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள்  உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். 

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தில் மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பாக காந்தி  சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி  ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் மைதீன்ஷா தலைமை வகித்து, காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் ஆர்.மணிவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்க டாசலம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அம்பிகா, மாவட்டத் தலைவர் பத்மாவதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரவீந்தி ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.