நாகர்கோவில், மே 25-
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை யின் சார்பில் சுசீந்திரம் கன்னியாகுமரி புற வழிச்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுப்பணித்துறைகள், நெடுஞ்சாலைத் துறைகள் மற்றும் சிறு துறைமுகங்களின்கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனஎன்றார்.
குறிப்பாக பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது, புதிய சாலைகள் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் கன்னி யாகுமரி சுசீந்திரம் புறவழிச்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சி.ஆர்.ஐ.டி.பி திட்டத்தின்கீழ் (2022 – 2023) மருங்கூர் பண்டாரபுரம் பகுதியில் ரூ.3.05 கோடி மதிப்பில் ஈத்தன்காட்டு மடம் சாலை 0/0 – 8/6 முடிய ஓடுதளம் மேம்பாடு செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் .பிரதீப் யாதவ்,உதவி ஆட்சியர் (பயிற்சி)குணால் யாதவ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், பொதுப் பணித்துறை தலைமை செயற்பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் அருணாச்சலம், மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆஸ்டின், பூதலிங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.