தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவில் பின்புறமுள்ள காம்பவுண்ட் சுவரை ஒட்டி பூச்செடிகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பிரேம்நாத் பைரன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் பல்வேறு பூச்செடிகளை நட்டு வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், கீர்த்திவாசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.