திருவாரூர், செப்.24 - திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட் பட்ட நீலக்குடி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் துவங்கி 2 ஆண்டுகள் நிறை வடைந்தன. இதையொட்டியும், பசுமை தமிழ்நாடு நாள் ஆகிய வற்றை கொண்டாடும் வகையிலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர். மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன், மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகி யோர் உடனிருந்தனர். தமிழக அரசின் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் நிதியை பயன் படுத்தி, மாநில அளவில் பெரும் மரக்கன்றுகளை நெடுஞ்சாலையோரங்களிலும், தரங்குன்றிய பகுதிகளி லும் நடுவதற்கான திட்டம் தமிழக அரசினால் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு 20,000 மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பெருமரக்கன்று கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் பெருமரக்கன்று களை நடவு செய்வதற்காக தரம் குன்றி மற்றும் வேலிக்கரு வேல் அடர்ந்த பகுதி, திருவாரூர் நீலக்குடி கிராமத்தில் மத்திய பல்கலைக்கழக வளாகப் பகுதியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள வேலிகருவேல் மரங்கள் அகற்றப்பட்டு 20,000 எண்ணிக்கையிலான பெரு மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் முதற்கட்டமாக 1000 மரக்கன்றுகளை, மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவி யர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் நேரடி பங்க ளிப்போடு நடுவதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், மாவட்டத்தில் சம்பந்தபட்ட துறைகளின் மூலம் மரக்கன்றுகள் பள்ளி, கல்லூரிகளிலும், விவசாயிகளின் நிலங்களிலும் மழைக்கா லம் வருவதற்கு முன்பே நடப்படவுள்ளன.