districts

திருச்சி முக்கிய செய்திகள்

அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நடவு

அறந்தாங்கி, ஆக .19  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலு வலகம் அருகே முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர், சமூக  சேவகர்  அறந்தாங்கி நூலகத்தில் நூலகர்  கார்த்திகேயன் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நடப்பட்டன. நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கோ. துளசிராமன்,  கலைஅரசி மண்டலமுத்து நகராட்சி பொறி யாளர் நாகராஜன், சுகாதார அலுவலர் சரவணன்  மற்றும் பிசியோதெரபி மருத்துவர் ரோட்டரி விஜய், அறந்தாங்கி நூலகர் கலைச் செல்வி, ஆவுடையார்கோவில் நூலகர் ரதிஸ்ரீ.  நகராட்சி ஊழியர்கள் மற்றும் கார்த்திகேயன் குடும் பத்தினர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி அரசு மருத்துவமனை  நோயாளிகளுக்கு அன்னதானம் 

தஞ்சாவூர், ஆக.19 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவ மனையில், லயன்ஸ் பசிப்பிணி போக்கும் திட்டத்தின் கீழ், பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பாக, சாசன உறுப்பினர் ராஜசேகர் பேத்தி பிரணவி பிறந்த நாளை முன்னிட்டு  250 புறநோயாளிகளுக்கு கேசரி, இட்லி, பணியாரம், இடியாப்பம், வாழைப்பழம், பலாச்சுளை,  ஊற வைத்த பாதாம் பருப்பு, நவதானிய கூழ் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் பா.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இணை பொருளாளர் எம்.நீல கண்டன், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி,  சங்க பொருளாளர் ஏ.ரவி சாசன பொருளாளர் எஸ்.மைதீன் பிச்சை, முதல் துணைத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த அன்னதானத் திட்டத்தை பசிப்பிணி போக்கும் திட்டத்தின் மாவட்டத் தலைவர் அரிமாபாரதி சிவகுமார் துவங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் முன்னாள் செயலாளர்கள் டி.வி குமார் ( எ) பழனிவேல், ஆறு முகம், முன்னாள் பொருளாளர்கள் பன்னீர்செல்வம், சங்கர் ஜவான், பாலமுருகன், ரவிச்சந்திரன், ராஜசேகர், பெரிய சாமி, முருகன், ராமசாமி கலந்து கொண்டனர். 

செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை சீலிங் பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்

திருச்சிராப்பள்ளி,ஆக,19 திருவெறும்பூர் அருகே வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் திருச்சி மட்டுமல்லாது சுற்று வட்ட மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தினமும் வீட்டில் இருந்தும் அங்கு உள்ள விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர். இந்நிலையில் செல்லம்மாள் மேல்நிலைப் பள்ளி யில் ஒரு வகுப்பிற்கு மாதிரி தேர்வு நடைபெற்று வருவதால் 9ஆம் வகுப்பு மாணவர்களை வேறு ஒரு வகுப்பறையில் அமர வைத்துள்ளனர். அந்த வகுப்பறையில் இருந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. அப்பொழுது மின்விசிறி ஓடிக்கொண்டி ருந்ததால் அந்த மின்விசிறியில் பட்டு தெறித்தது. இதில் துவக்குடியை சேர்ந்த பாண்டி மகன் நிரஞ்சன் உட்பட 5 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.  அவர்களை செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் உடனடியாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது.

ஆக. 23இல் குறை தீர் கூட்டம்

மயிலாடுதுறை,ஆக. 19 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகா பாரதி தலைமையில்  வரும் 23 அன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை, நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக் கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்பு டைய கருத்துகளை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி  தெரிவித்துள்ளார்.

திருவானைக்காவலில் சாலையின் நடுவே 4ஆவது முறையாக பள்ளம்: போக்குவரத்து மாற்றம்

திருச்சிராப்பள்ளி,ஆக.19- திருச்சி திருவானைக்காவல்- ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலம் செல்கின்ற காந்தி சாலை பகுதியில், திங்கள் அன்று காலை சாலை நடுவே சிறிய அளவிற்கு ஒரு ஓட்டை விழுந்தது. அதைக்கண்ட, திருச்சி மாநக ராட்சி, 4ஆவது வார்டு மேற்பார்வை யாளர் ராஜா, அப்பகுதியில் பேரிகார்டு களை வைத்துவிட்டு உயரதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத் தார். இதற்கிடையே, பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் பாதை என்ப தால், போக்குவரத்து ஒரு வழிப்பாதை யாக மாற்றப்பட்டது. ஸ்ரீரங்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத் தும், நெல்சன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இச்சாலையின் கீழே பதிக்கப் பட்டு இருந்த கழிவுநீர் குழாய் உடைப்பெடுத்ததால், கழிவு நீர் வழிந்தோடி சாலையின் கீழே இருந்த மண் அனைத்தையும் அடித்துச் சென்றதால் இந்த பள்ளம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. அதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து முழு மையாக நிறுத்திவிட்டு, கழிவு நீர் குழாயை புதிதாக அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, ஏப்ரல் 10ம் தேதி, ஏப்ரல் 26ம் தேதி என தொடர்ந்து தற்போது, 4வது முறையாக பள்ளம் ஏற் பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் நகராட்சியாக இருந்தபோது, 25 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட கழிவு நீர் குழாய் தொடர்ந்து உடைப்பெடுத்து வருகிறது. உள்ளூர் பயணிகள், வெளியூர் பக்தர்கள் என்று எப் போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இச்சாலையில் அடிக் கடி பள்ளம் ஏற்படுவது ஆபத்தானது. திடீரென்று ஒரு பள்ளம் ஏற் பட்டால் மிகப்பெரிய அளவில் விபத்து நடந்து, அசம்பாவித சம்பவம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதை முன்கூட்டியே தவிர்க்கும் வகையில் உடனடியாக இப்பகுதி முழுவதும் உள்ள பழைய குழாய்களை தோண்டி எடுத்துவிட்டு, புதிதாக குழாய்களை அமைக்க வேண்டும் என்பதுதான் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாகஇருக்கிறது.

மாதர் சங்க  புதிய கிளை  அமைப்பு

கும்பகோணம் ஆக 19 கும்பகோணம் மாநகரம், தாராசுரம் மெஷின் தெரு பகுதியில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் புதிய கிளை அமைக் கப்பட்டது.  கிளைத் தலைவராக வி.கிருஷ்ணவேணி , செயலாளராக வைலட் ரோஸ் , பொருளா ளராக ஜெயந்தி உள்ளிட்டு 9 பேர் கொண்ட புதிய கிளை தேர்வு செய்யப்பட்டது.  ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருள்களை, தட்டுப்பாடின்றி  வழங்கிட வலியுறுத்தி ஆகஸ்ட் 21ல் ரேஷன் கடை முன்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் இயற்றப்பட்டது. கூட்டத்தில் குடந்தை மாநகர தலைவர் ஏ.எஸ். சுமதி ,மாநகரச் செயலாளர் கே.எஸ். சுமதி, மாநில குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி,  அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பழ.அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளி மேலாண்மைக்  குழு கூட்டம் 

பாபநாசம், ஆக. 19-  பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொ டக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தி ற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு  முருகன் தலைமை வகித்தார். இதில் தலைவியாக புவனேஸ்வரி, துணைத் தலைவியாக கேத்ரின் விமலா உட்பட உறுப்பி னர்கள் தேர்வாகினர். இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியை விமலா, கல்வியாளர் ரெமி பாஸ்டினா, பேரூராட்சி கவுன்சிலர் உட்பட பங்கேற்றனர்.

சேதுபாவாசத்திரம் அருகே  செல்போன் திருட்டு

தஞ்சாவூர், ஆக.19 -  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ரெட்டவயலை சேர்ந்தவர் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் ஜீவானந்தம். இவர் சனிக்கிழமை இரவு வீட்டில் தலை யணை அருகே செல்போனை வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.  அப்போது மர்மநபர் ஒருவர் ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த கொசுவலையை பிரித்து சுருக்கு கயிறை பயன்படுத்தி செல்போனை திருடிச்சென்று விட்டார். காலையில் செல்போனை தேடியபோது திருடு போனது தெரிய வந்தது.  திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சுருக்குக்கயிறு வீட்டின் வெளியில் கிடந்துள்ளது. இது குறித்து முனைவர் ஜீவா னந்தம் பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப்  சார்பில்  பெண்களுக்கு சேலை

பாபநாசம், ஆக. 15-   பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சார்பில் ஏழமை நிலையிலுள்ள 200 பெண்களுக்கு சேலை  வழங்கப் பட்டன. இதில் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் செயலர் திலகவதி, தலைவி தில்லை நாயகி, பொருளாளர் வசந்தி, மண்டலத் தலை வர் சங்கர லட்சுமி, பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில், செயலர் பன்னீர் செல்வம், பொருளாளர் மாரிமுத்து, வட்டா ரத் தலைவர் கணேசன், மாவட்டத் தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

கர்நாடகா, கேரளா போல்
பள்ளிக் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்  கொள்கை தேவை

பாபநாசம், ஆக. 20-  மனித நேய மக்கள்  கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளி யிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ண கிரி மாவட்டம், பர்கூருக்கு அருகே கந்திகுப்பத்தில்  செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை `தேசிய  மாணவர் படை (என்.சி.சி) பயிற்சி முகாம்’ நடைபெற்றது. பள்ளி வளா கத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 17 மாணவிகள் கலந்துகொண்டனர்.  இந்நிலையில், என்.சி.சி முகா மிற்குச் சென்ற 13 வயதான எட்டாம் வகுப்பு மாணவி, பள்ளி அரங்கத் தில் சக மாணவிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில், என்.சி.சி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர் எட்டாம்  வகுப்பு மாணவியிடம்அத்துமீறி நடந்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்சனை பள்ளியின் முதல்வரி டம் தெரிவிக்கப்பட்ட போது இதனைப் பெரிது படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மறுநாள் காலை  மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதால் பெற்றோர்கள் மருத்துவ மனையில் அனுமதித்தபோது, அவர் பாலியல் துன்புறுத்தலுக்குஆளானது தெரிய வந்துள்ளது.உடனடியாக, என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும் `போக்சோ’ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் 13 மாணவர்கள்  பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருக் கின்றனர்.

அனுமதி பெறவில்லை- பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படவில்லை

அந்தப் பள்ளி தேசிய மாணவர் படைக்கான பயிற்சி முகாம் நடத்த மாவட்ட கல்விநிர்வாகத்தில் எந்தவித அனுமதியும் பெறவில்லஎன்பதும் தெரிய வருகிறது. மேலும் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைக ளும் தங்கி பயிற்சி எடுப்பதற்கான முகாமில் அவரவர்களுக்கு உரிய பாது காப்பு நடைமுறைகளைப் பள்ளி செயல்படுத்தவில்லை. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகப் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கள் முகாமில் இருந்திருக்க வேண்டும்.  தேசிய மாணவர் படை முகாமுக் கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளி நிர்வாகத்தினர் அப்பட்டமாக மீறி உள்ளனர். தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிகளில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.  பள்ளியில் பாலியல் வன்கொடுமை நடந்தால் அரசாணை எண் 121/2012 ன் படி பாலியல் வன்கொடுமை செய்கிறவர்கள் மற்றும் அதற்குத் துணை போகின்றவர்களின் சான்றி தழ்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் இந்த நடைமுறையைத் தமிழகத்தில் அமல்படுத்தியதாகத் தெரியவில்லை. மாவட்ட கல்வி நிர்வாகம் குழந்தைக ளுக்கான அமைப்புகளும் இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவற்றில் பள்ளிக்குழந்தைகளுக்கான பாதுகாப்புக் கொள்கை உரு வாக்கப்பட்டு, செயல் முறையில் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இது போன்ற பாதுகாப்பு கொள்கை உரு வாக்கப்படவேண்டும்.  போக்ஸோ சட்டத்தைக் கண்கா ணிக்கின்ற தலைமை அமைப்பான மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கால் செயல்படாமல் இருக்கிறது. இதனை உடனடியாகச் சரி செய்து குழந்தைகள் நலன் மற்றும்உரிமைகளில் சட்ட நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் கள அனுபவம் உடைய நபர்களைப் பொறுப்பாளர்களாக நியமனம் செய்து அரசு தீவிரமாகச் செய லாற்றும் மாநில குழந்தைஉரிமைகள் ஆணையத்தை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.