districts

img

தரங்கம்பாடி, வெளிவயல் கிராமத்தில் பனை விதைகள் நடவு

மயிலாடுதுறை/தஞ்சாவூர், நவ.10 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி கடற்கரை பகுதியில் இந்திய சமா தான கூட்டமைப்பு, புவி காப்பு இயக்கம் சார்பில் 4 ஆயிரம் பனை விதைகள் நடவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் எஸ்.பவுல்ராஜ் தலைமை  வகித்தார். தரங்கம்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுணசங்கரி குமர வேல் முன்னிலை வகித்தார். தரங்கம்பாடி  வட்டாட்சியர் மகேஷ், தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மண் அரிப்பு தடுப்பு  மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 4 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு பணியை தொடங்கி வைத்தார். தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், புவி  காப்பு இயக்க நிர்வாகி இரணியன் மற்றும் பேரூராட்சி மன்ற ஊழி யர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். வெளிவயல் கிராமம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் கிரா மத்தில், பனை விதைகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் சுமார் 3 ஆயிரம் பனை விதைகள் கடற் கரை, நீர்நிலைகள், பொது இடங்க ளில் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து  அபூர்வ வகை உயிரினமான கடல்பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கை யேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். வனவர் சிவசங்கர், ஓட்டுநர் சண்முகம், வேட்டைத் தடுப்பு காவலர்கள், ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் பாலாஜி, மேலாளர் அன்பு, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி நாட்டு  நலப்பணித் திட்ட அலுவலர் உள்ளிட்ட பலர் பனை விதைகளை நடவு செய்தனர்.