districts

சாலை வசதி கேட்டு இறையான்குடியில் மறியல்

நாகப்பட்டினம் ஜூன் 13.

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் இறை யான்குடி ஊராட்சியில் சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     இறையான்குடி ஊராட்சியில் உள்ள நீர்நிலைப் புறம்போக்குகளில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். குண்டும்-குழியுமாக உள்ள சாலைகளை தரம் உயர்த்தி தார்ச் சாலையாக மாற்ற வேண்டும். இறையான்குடி அய்ய னார்கோவில் அருகில் உள்ள  பழுதடைந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றி அமைத்துத் தர வேண்டும். கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை  மறியல்  நடைபெற்றது.

    கிளைச் செயலாளர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற  போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கே. சித்தார்த்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.கிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.