திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.