districts

img

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சிராப்பள்ளி, பிப்.26 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சி புறநகர் மாவட்ட திருவெறும் பூர் தாலுகா செயலாளர் மல்லிகா, மாவட்ட  ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்த தாவது: திருவெறும்பூர் தாலுகா பத்தாளபேட்டை  ஊராட்சியில் சாதி பிள்ளை எனும் சமு தாயத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் தொழில், பாத்திரங்கள் பழுது பார்ப்பது மற்றும் ஈயம் பூசுவது. இவர்களின் பூர்வீகம்  பத்தாளப்பேட்டை கிராமம். இருப்பினும் இவர்கள் நாடோடிகள் போல் ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  இவர்களுக்கு குடியிருக்க வீடு இல்லா ததால், தற்போது பத்தாளபேட்டை கிராமத் தில் ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசிக்கின்றனர். ரேசன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்கள்கூட இவர்களுக்கு கிடைக்க வில்லை.  மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு சாதிச் சான்றுகளும் கிடைக்கவில்லை. எனவே தாங்கள் சாதிபிள்ளை சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை, ரேசன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் சாதிச்  சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை ஆட்சியரிடம் கொடுத்த போது  மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் “ரேசன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச் சான்றி தழ் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் எனவும், இவர்களுக்கு உரிய இடங்களை ஆய்வு செய்து இடம் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித் தார்.