திருச்சி ராப்பள்ளி, அக்.14- திருச்சி மாநக ராட்சி மக்கள் குறைதீர் கூட்ட ரங்கில் திங்களன்று மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி குழு சார்பில் உறையூர் பாண்டமங்கலம் கிளைச் செயலாளர் சுப்பிரமணி கொடுத்த மனுவில், பாண்டமங்க லம் முஸ்லிம் தெரு அருகில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் கதவுகள் உடைந்தும், கதவுகள் இல்லாத நிலையும் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆப்பக்கார தெரு கிளைச் செயலாளர் வெங்கடாசலம் கொடுத்த மனுவில், புத்தூர் நால்ரோட்டில் பொது மக்க ளுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என தெரி வித்திருந்தார். மேற்கு பகுதி குழு உறுப்பினர் அப்துல்கயும் கொடுத்த மனுவில், தில்லை நகர் பத்தாவது கிராஸ் பெட்ரோல் பங்க் அருகில், பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.