திருச்சிராப்பள்ளி, அக்.9 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க இளம் பெண் உபக்குழு கன்வீனர் நிவேதா மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “வாலிபர் சங்க திருச்சி மாநகர் பெண்கள் உபக்குழு சார்பில் பெண்கள் தொடர்பான பிரச்சனை கள் குறித்து களஆய்வு செய்த போது, அரசு பேருந்துகளில் இலவசமாக பய ணிக்கக் கூடிய பெண்களை அநாகரிகமாக பேசுவதும், பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தா மல், பெண் தொழிலாளிகளை பேருந்தில் ஏற்றாமல் செல்வதும் தெரியவந்தது. எனவே அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டத் தலைவர் லெனின் ஆகி யோர் உடனிருந்தனர்.