districts

img

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

தஞ்சாவூர், நவ.30 - தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைவ ருக்கும் உரிய நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு  கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் முழுவதும் நடைபெற்றது.  இதில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு, வாழை, மரவள்ளி உள்ளிட்ட இதர பயிர்களுக்கும் போதுமான நிவா ரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள், மீனவர்கள் அனைவர் குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 

கால்நடை இறப்பு 

வீடு சேதம், மனித உயிரிழப்புகளுக்கு உரிய  நிவாரணங்களை வழங்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்து, இதுவரை கிடைக்கப் பெறாத விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகையை பெற்றுத் தர வேண்டும். அரசு அறி வித்த நகை கடன் தள்ளுபடியை, தகுதியுள்ள பய னாளிகள் அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் புதிய  விவசாயக் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் உரத் தட்டுப்பாட்டை போக்கி செயற்கை விலையேற்றத்தை கட்டுப்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கோட்டாட்சி யர், வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது. பேராவூரணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பி னர் வீ.கருப்பையா தலைமை வகித்தார். பட்டுக் கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம்  தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செய லாளர் ஜீவானந்தம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் உலகநாதன், சிபிஎம்  ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூதலூரிலும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஒரத்தநாடு வட்டாட்சி யரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிபிஎம்  ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், திருவோணம் பெரியசாமி, விவசாயிகள் சங்கம்  திருவோணம் ஒன்றியச் செயலாளர் பி.கோவிந்த ராஜ், விதொச ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திரு வையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் எம். பழனி அய்யா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றி யச் செயலாளர் பிரதீப் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பாபநாசம் 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியக் குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் பாபநாசம் தாலுகா அலு வலகம் அருகே நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் காதர் ஹூசைன் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் செந்தில்குமார் கண்டன உரை யாற்றினார்.

 

 

;