districts

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கண்டித்து க.பரமத்தியில் மனு கொடுக்கும் இயக்கம்

கரூர், டிச.11- மின் வாரியத்தை தனி யார் மயமாக்கும் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்ட த்தை கண்டித்தும், தமிழ கத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்றும் நடவடிக்கையை தமிழக  அரசு கைவிட வேண்டும் என  வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்  மாவட்டம் க.பரமத்தி ஒன்றி யக் குழு சார்பில் மனு கொடுக்கும் இயக்க தெரு முனைக் கூட்டம் நடை பெற்றது. க.பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்ற கூட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் எம்.கே. மணியன் தலைமை வகித் தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கந்தசாமி, சி.ஆர்.ராஜா முகமது  ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசி னர். க.பரமத்தி, ஆரியூர், பவித்ரம், ஒத்தமாந்துறை உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களைச் சேர்ந்த விவசா யிகள், பொதுமக்கள் கலந்து  கொண்டனர். பின்னர் க. பரமத்தி மின்வாரிய அலுவ லகத்தில் மனுக்கள் வழங்கப் பட்டன.