districts

img

இலவச வீட்டுமனை கேட்டு சிபிஎம் தலைமையில் மனு

திருச்சிராப்பள்ளி, நவ.24-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி செயலாளர் ரபீக் அகமது தலைமையில், மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் வாத்துக்காரத் தெரு, பெருமாள் கோவில் தெரு, மருதாண்டக் குறிச்சி அரிஜனத்தெரு, காவேரி நகர், பனிக் கன்தெரு, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 137 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனித்தனியாக கொடுத்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:  நான் கடந்த பல ஆண்டுகளாக வாடகை  வீட்டில் வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து வரும் நான் வாடகை கொடுக்க முடி யாமல் சிரமப்படுகின்றேன். சொந்த நிலம், சொந்த வீடு இல்லாத ஏழையாகிய எனக்கு இலவச வீட்டு மனை அல்லது அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.  மனுவை கொடுத்த போது சிபிஎம் பாண்டமங்கலம் கிளை செயலாளர் சுப்ர மணி, பகுதிக்குழு உறுப்பினர் ஆசிக்கலி ஆகியோர் உடன் இருந்தனர்.