districts

img

குடிமனைப் பட்டா கேட்டு விதொச மனு

பாபநாசம், ஜூன் 26- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மா பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த உக்கடையில் குடி மனை மற்றும் குடிமனைப் பட்டா கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் பாலமுரு கன் தலைமை வகித்தார்.  அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்க  ஒன்றியக் குழு உறுப்பினர் அய்யாச்சாமி, ஒன்றியச் செயலாளர் சேகர், மாநிலச் செயலாளர் மாரியப்பன், மாநிலக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, மாவட்டச் செய லாளர் வாசு, மாவட்டத் தலை வர் பிரதீப் ராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் நாக ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.