தஞ்சாவூர், ஜூன் 19-
தஞ்சை மாவட்டம் பேரா வூரணி அருகே குளம் மேம் பாட்டு பணிக்கு டெண்டர் விடப்பட்டு, 1 ஆண்டாகியும் பணிகள் நிறைவடையாத தைக் கண்டித்து, அனைத் துக்கட்சியினர் சார்பில் ஜூன் 27 அன்று ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது.
பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சி சிவன் கோவில் அருகே திருக்குளம் அமைந்துள் ளது. இந்த குளத்தை மேம் பாடு செய்ய கலைஞர் நகர்ப் புற மேம்பாடு திட்டம் 2022-23 இன் கீழ் ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு 1 ஆண்டுக்கு மேலாகிறது. இதுவரை 30 விழுக்காடு பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
திட்ட மதிப்பீட்டின்படி பணிகள் நடைபெறவில்லை. குளத்தை அளவீடு செய்து, முறைப்படுத்தி ஆக்கிரமிப்பு களை அகற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும் என திட்ட மதிப்பீடு வழங்கப்பட் டுள்ளது. ஆனால் இதுவரை குளத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப் படவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுத்தும் இது நாள்வரை எவ்வித நட வடிக்கையும் இல்லை.
எனவே, உடனடியாக குளத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி திட்ட மதிப்பீட்டின்படி கம்பி வேலி அமைத்து தர வேண் டும் எனக் கோரி ஒப்பந்த தாரர் மற்றும் நிர்வாகத்தை கண்டித்து, ஜூன் 27 அன்று அனைத்துக்கட்சி உறுப்பி னர்கள் மற்றும் பேரூராட்சி பொதுமக்கள் சார்பில் பெரு மகளூர் பேரூராட்சி அலுவல கம் முன்பாக கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.