தஞ்சாவூர், ஜூன் 4-
உதவித்தொகை இது வரை கிடைக்காமல் காத்தி ருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் உடனடியாக உதவித்தொகை கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்-பை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்டத் தலைவர் டி.கஸ் தூரி, மாவட்ட துணைத்தலை வர்கள் பழ.அன்புமணி, ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவி.ராதிகா, ஏ.சாமியப்பன், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் தங்கப்பாப்பா உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் மாற்று திற னாளிகளுக்கான குறைதீர் கூட்டம், கடந்த ஆறு மாத காலமாக நடத்தப்பட வில்லை. குறைதீர்க் கூட்டத்தை இரண்டு மாதங் களுக்கு ஒரு முறை தவறா மல் நடத்தி, மாற்றுத்திற னாளிகளின் கோரிக்கை களை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும்.
கும்பகோணம் வரு வாய் கோட்டாட்சியர் அலுவ லகம், பூதலூர், திருவை யாறு உள்ளிட்ட சில வட் டாட்சியர் அலுவலகங் களில், சமூக நலத்துறை வட்டாட்சியர் அலுவலகம் மாடியில் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் மாடிக்கு செல்வதில், சிரமங் களை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, அதை தரைத்தளத்திற்கு மாற்ற வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை இருந்தால் தான் உதவித்தொகை வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. படுத்த படுக்கையாக இருக்கும் சில மாற்றுத்திறனாளிகள் கை ரேகைகள் முறையாக பதி வாகாத நிலையில், ஆதார் அட்டை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலரின் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு, மாற்றுத் திறனாளி களுக்கான உதவித்தொ கையை வழங்க செய்ய வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங் கள், தனியார் நிறுவனங் களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் செல்லும் வகை யில் சாய்வு தள நடை மேடை அமைக்க வேண்டும்.
வருவாய் கோட்டாட்சி யர் தலைமையில் நடை பெறும் மாற்றுத்திறனாளி கள் குறை தீர் கூட்டத்தில், அரசின் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக வங்கி, சுகாதாரம், காவல், ரயில்வே துறை அலுவலர் கள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
உதவித்தொகை இது வரை கிடைக்காமல் காத்தி ருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் உடனடியாக உதவித்தொகை கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த னர்.
கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப், “மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை அனைத்தும் கனிவுடன் பரிசீ லித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி யளித்துள்ளார்.