districts

சிபிஎம் போராட்ட அறிவிப்பு வெற்றி பொது மக்களின் வசதிக்கேற்ப பேருந்துகளை இயக்க ஒப்புதல்

புதுக்கோட்டை, மார்ச் 6 - பொதுமக்களின் வசதிக்கேற்ப பேருந்துகளை இயக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறி விப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மேலமுத்துடையான்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும்.  புதுக்கோட்டையிலிருந்து மெய்வழிச் சாலை வழியாக செல்லும் நகரப் பேருந்து கூத்தினிப்பட்டி வழியாக அன்ன வாசல் வரை செல்ல வேண்டும்.  மேல முத்துடையான்பட்டியி லிருந்து அன்னவாசல் செல்லும் சாலையை மேம்படுத்தப்பட்ட தார்ச்சா லையாக தரம் உயர்த்த வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அன்னவாசல் ஒன்றியம்  மேலூர் கிளைகள் மற்றும் மேலமுத்து டையான்பட்டி பொதுமக்களின் சார்பாக  புதன்கிழமை மேல முத்துடை யான்பட்டியில் சாலை மறியல் போராட் டம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குளத்தூர் வட்டாட்சியர் கவியரசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தையில் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், அன்னவாசல் ஒன்றி யச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.ஜோஷி, ஏ.தேவராஜன், ரகுபதி மற்றும்  அதிகாரிகள் தரப்பில் அரசுப் போக்கு வரத்துக் கழக மண்டல துணை மேலா ளர்(வணிகம்), அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பங் கேற்றனர். பேச்சுவார்த்தையில், “புதுக்கோட் டையிலிருந்து திருச்சி செல்லும் நகரப் பேருந்துகள் அல்லாது புறநகர் பேருந்துகள் புதுக்கோட்டையிருந்தும், திருச்சியிலிருந்தும் தலா 7 முறைகள் முத்துடையான்பட்டியில் நின்று செல்வது. இதுதொடர்பான விளம்பரப் பலகை வரும் வெள்ளிக்கிழமைக்குள் வைக்கப்படும். கூத்தினிப்பட்டிக்கு பள்ளி மாணவர் களின் வசதிக்கு ஏற்ப காலை 7 பி,  மாலை 16 என்ற நகரப் பேருந்துகள்  இயக்கப்படும். மேலமுத்துடையான் பட்டியிலிருந்து அன்னவாசல் வரையில்  நடக்கும் சாலை அமைக்கும் பணி, வரு கின்ற ஜூன் மாதத்திற்குள் நிறை வடைந்துவிடும்” என உறுதியளிக்கப் பட்டது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்ட அறிவிப்புக்குக் கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.