districts

img

முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு பதவி நீட்டிப்பா?

சேலம், ஜூலை 1- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக் காலத்தை தமிழக ஆளுநர் நீட்டிப்பு செய்த தற்கு பல்கலைக்கழகப் பணியாளர்கள் மற் றும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்ட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்க ளில் சர்ச்சைகளுக்கும். ஊழலுக்கும் பெயர் போன பல்கலைக்கழகம் சேலம் பெரியார்  பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத் தில் துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டு கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பணி  நீட்டிப்பை வழங்கக் கூடாது என்றும், அவர்  மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை அரசு  எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத் தின் ஆசிரியர்கள் சங்கம், பணியாளர்கள் சங் கம் வலியறுத்திருந்தனர். இந்நிலையில், சேலம் பெரியார் பல்க லைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாத னின் பதவிக் காலத்தை வரும் 2025-ஆம்  ஆண்டு மே 19- ஆம் தேதி வரை நீட்டித்து  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட் டுள்ளார். மேலும், அதற்கான ஆணையை துணைவேந்தர் ஆளுநரை நேரில் சந்தித்துப்  பெற்றுக் கொண்டார்.  துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்  காலத்தை நீட்டிக்க அரசு எதிர்ப்பு தெரிவித் திருந்த நிலையில் தமிழக ஆளுநரின் தன் னிச்சையான இந்த செயல் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும் ஆளுந ரின் நடவடிக்கையை கண்டித்து சேலம் பெரி யார் பல்கலைக்கழக பணியாளர்கள், ஆசிரி யர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியா ளர் சங்கச் செயலாளர் சக்திவேல், ஆசிரியர் சங்கச் செயலாளர் வைத்தியநாதன், அமைப் பாளர் கிருஷ்ணேனி உள்ளிட்டு பலர் பங்கேற் றனர்.