districts

img

வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.11 - ‘இந்தியா’ கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்  கே.என். அருண்நேருவை ஆதரித்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  திருச்சி மாவட்டம் வாழ்மால்பாளையத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பி னர் நல்லையன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு, கிளைச் செயலாளர்கள் மற்றும் இந்தியா கூட்டணி  கட்சியினர் கலந்து கொண்டனர். பெரிய சாமி நன்றி கூறினார்.