பெரம்பலூர், ஏப்.20-
ஆர்-1144 பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சங்க வளாகத்திலுள்ள இ-சேவை மைய செயல் பாட்டினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் வியாழனன்று நேரில் ஆய்வு செய்தார்.
கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரண்டு ஆண்டுகளாக பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருவதையும், கடந்த ஆண்டு 6,459 நபர்களுக்கு ரூ.57.1 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்பட்டு அதனை தவணை தவறாமல் அனைத்து வாடிக்கையாளர்களும் குறித்த நேரத்தில் திருப்பி செலுத்தி சங்கத்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலாபகரமாக செயல்படுத்தி முதலீட்டாளர்களுக்கு பங்கு தொகை பிரித்து கொடுத்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயல்பாடுகள், நடவடிக்கைகள், பராம ரிக்கும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பாண்டியன், கூட்டுறவு சங்க செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.