districts

img

இந்தியன் வங்கியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை,ஆக. 01- மயிலாடுதுறை மாவட் ட்டம், சீர்காழி இந்தியன் வங்கி முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் சங்கத்தின் சீர்காழி நகர செய லாளர் சுரேஷ்குமார்  தலை மையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.   மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை சீர்குலைக் கும் கொள்ளிட முக்கூட்டு இந்தியன் வங்கியை கண்டித் தும், மாற்றுத்திறனாளிகள் 2016 உரிமைகள் சட்டத்தின் படி வங்கியின் கட்டமைப்பை மாற்றாமல் இயங்கி வரும் வங்கியின் மீது நடவடிக்கை எடுத்திடுக, மாவட்ட ஆட்சி யர் மூலம் மானியம் பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் கடனை வழங்க மறுக்கும் வங்கி மேலாளர் மீது கடுமையான நடவ டிக்கை எடுத்திடுக,தமிழ் பேசும் வங்கி மேலாளரை நியமித்திடுக உள்ளிட்ட கோரிக்கைகளை போ ராட்டம் வலியுறுத்தியது. இந்தப் போராட்டத்தில்  மாவட்டச் செயலாளர் புரு ஷோத்தமன், மாவட்டத் தலைவர் டி.கணேசன், ஒன்றிய பொருளாளர் சுமதி, ஒன்றிய துணை செயலாளர் கமல கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஒன்றிய துணைத் தலைவர் கலையரசன்,  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.போராட்டத்தில் ஏராள மானோர் கலந்துக் கொண்டனர்.