தஞ்சாவூர், அக்.16 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய ரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருவையாறு அருகேயுள்ள விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 200 பேர் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்க ளின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், விளாங்குடி வி.திருஞானசேகர் தலைமை யில் திரண்டு வந்து மனு அளித்தனர். அம்மனுவில், “கொள்ளிடத்திலிருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக தஞ்சாவூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் குழாய் பதிக்கும் பணியைக் குடிநீர் வடிகால் வாரி யம் மேற்கொண்டு வருகிறது. இக்குழாய் அமைக்கும் பாதையில் குடியிருப்புகளும், கடைகளும் உள்ளன. இதனால், விவசாயி களும், வியாபாரிகளும் பாதிக்கப்படு கின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர், வருவாய் ஆய்வா ளர், கிராம நிர்வாக அலுவலர், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் அண்மையில் கலந்து கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை யில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், குழாய் பதிக்கும் பணி மீண்டும் மேற்கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படும் முதன்மைச் சாலை வழியாக சிமெண்ட் குழாய் பதிப்ப தற்கு பதிலாக, பாசன வாய்க்கால் கரையில் சிமெண்ட் குழாய்களை பதித்து பொதுமக்க ளுக்கும், விவசாயிகளுக்கும், வியாபாரி களுக்கும் இடையூறு இல்லாமல் திருவா ரூர் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.