தஞ்சாவூர், ஏப்.27- வெண்ணாற்றில் நாணல் மண்டிக் கிடப்பதால், குடிநீர் கிடைக்காத நிலை யில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் உள்ள அக்ரஹார தெரு, நடுத்தெரு, சந்துத்தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து, அப்பகுதியினர் அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சனிக்கிழமை பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் திடீ ரென மறியலில் ஈடுபட்டனர். இதை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூத லூர் காவல்துறையினர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் மறியலை கைவிடப் போவது இல்லை என போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, பூதலூர் வட்டாட்சி யர் மரியஜோசப் சம்பவ இடத்திற்கு வந்து, விரைவில் தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததின் பேரில், பொதுமக்கள் மறியலை கை விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், “எங்கள் ஊரில் இருந்து வெண் ணாறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான். இருப்பினும் ஆற்றில் மணல் அள்ளியதால், நாணல் மண்டிக் கிடக் கிறது. எங்கள் பகுதியை சுற்றியுள்ள ஏரி, குளங்கள் எல்லாம் போதிய அளவில் பராமரிப்பு இல்லாமல் போனதாலும் தண்ணீர் இல்லை. இதனால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகு வாக பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சனை பூதாகரமாக எழுந்துள்ளது. ஆற்றுக்கு அருகே எங்கள் ஊர் இருந்தாலும், தண்ணீர் உப்புத் தன்மையுடன்தான் உள்ளது. அதுவும் குறைந்த அளவில் தான் வருகிறது” என்றனர்.